tamilnadu

img

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு...

சென்னை:
மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
ஈரோடு, திருப்பூர், திண்டுக் கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கரைக் கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.இதன் காரணமாக மீனவர்கள் 20ஆம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.அக்டோபர் 21, 22ஆம் தேதிகளில் தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா கடலோர பகுதிகளிலும், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளிலும், அக்டோபர் 23ஆம் தேதி தெற்கு மகாராஷ் டிரா, கோவா, கர்நாடகா கடலோரப் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.