லக்னோ,பிப்.13- உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பல வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். லக்னோ நீதிமன்றத்தில் வியாழனன்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பலர் அதிர்ச்சியடைந்து, அலறல் சத்தத்துடன் பதறி ஓடினர். குண்டு வெடிப்பில் பல வழக்கறிஞர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.