tamilnadu

img

உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு

லக்னோ,பிப்.13- உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில்  குண்டு வெடித்து பல வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.  லக்னோ நீதிமன்றத்தில் வியாழனன்று பயங்கர சத்தத்துடன்  குண்டு வெடித்தது.  இதனால் பலர் அதிர்ச்சியடைந்து, அலறல் சத்தத்துடன்  பதறி  ஓடினர். குண்டு வெடிப்பில் பல  வழக்கறிஞர்கள் காயமடைந்துள்ளதாக  கூறப்படுகிறது. காவல்துறையினர் 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.