tamilnadu

பள்ளிக்கு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

மும்பை, ஜுன் 18- மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பை பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலம்போலி என்ற இடத்தில் பள்ளிக்கு அருகே மர்மப் பொருள் கிடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் நடத்திய சோதனை யில் அது வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடிகாரத்து டன் இணைக்கப்பட்டிருந்த அந்த வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் பத்திரமாக எடுத்துச் சென்றனர். இந்த வெடிகுண்டை வைத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக் களின் பதிவுகளை ஆராய்ந்து வருவ தாகவும் நவி மும்பை காவல்துறை ஆணையர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.