tamilnadu

img

திரைப்பட விழாவில் இந்தியில் பேசச்சொல்லி கட்டாயம்... தமிழ், தெலுங்கில் பேசவா என கேட்டு நடிகை டாப்சி பதிலடி

பனாஜி:
இந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் டாப்சி, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு தன்னுடைய திரை அனுபவங்கள் தொடர்பாக பார்வையாளர் களுடன் ஆங்கிலத்தில் கலந்துரையாடியுள்ளார்.இந்நிலையில், அந்த உரையாடலின்போது குறுக்கிட்ட ஒருவர், டாப்சியை இந்தியில் பேசுமாறு வலியுறுத்தியுள்ளார். உடனே டாப்சி அரங்கத்தினரை பார்த்து, ‘இங்குள்ள அனைவருக்கும் இந்தி மொழி புரியுமா?’ எனக்கேட்க, பெரும்பாலானோர் ‘புரியாது’ என்று கூறியுள்ளனர். இதனால் ஆங்கிலத்திலேயே டாப்சி தனது பேச்சைத் தொடர்ந்துள்ளார்.

ஆனாலும் அந்த நபர், டாப்சி இந்தியில்தான் பேச வேண்டும் என்றுதொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்துள் ளார். நீங்கள் இந்தி நடிகைதானே, அதனால் இந்தியில் பேசுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த டாப்சி, “நான், பாலிவுட் நடிகை மட்டுமல்ல, தென்னிந்திய நடிகையும்தான். அதனால் தமிழிலோ அல்லது தெலுங்கிலோ பேசவா?” என்று அவரிடம் எதிர்க்கேள்வி எழுப்பி, பதிலடி கொடுத்துள்ளார். டாப்சியின் இந்த பதிலைக் கேட்டு, அரங்கிலிருந்த அனைவரும் பெரும் ஆரவாரம் எழுப்பியுள்ளனர். அவரது கருத்துக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேள்விகேட்ட நபர் வாயடைத்து அமைதியாக அமர்ந்துள்ளார்.இந்தியைக் கட்டாயப்படுத்துவதற்கு எதிரான, நடிகை டாப்சியின் துணிச்சலான இந்த பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் தற்போது பாராட் டுக்கள் குவிந்து வருகின்றன.

;