குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கு (renewable energy) பெரிய அளவில் ஊக்கமளிக்க வேண்டும் என்று சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இது நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை உறுதிசெய்வதொடு, காலநிலை(climate) மாற்றம் மற்றும் சுற்றுசூழல் மாசுபடுவது குறையும் என்றார். பிரதமர் நரேந்திர மோடி தமது கனவு ‘தூய்மையான ஆற்றல் நிறைந்த எதிர்கால புதிய இந்தியா’ என்கிறார். இப்படி ஒரு பக்கம் கூறிவிட்டு, மறுபக்கம் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் வாயிலாக இந்தியாவை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஏலம் விட்டுக்கொண்டுள்ளது இவர்களது அரசு.
இந்தியாவில் 26 படிவுப்பாறை (sedimentary basins) வடிநிலப் பகுதிகள் கீழ்காணும் நான்கு வகை உற்பத்தி தன்மை கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன.
1. நிரூபிக்கப்பட்ட வணிக உற்பத்திதிறன் கொண்ட பகுதி (proven commercial productivity)
2. வளம் அடையாளம் காணப்பட்ட பகுதி
(identified prospectivity)
3. வளமான வடிநிலப்பகுதிகள் (prospective basins)
4. சாத்தியக்கூறு உள்ள பகுதிகள்
(potentially prospective)
இதில் தமிழ்நாட்டில் உள்ள காவிரிப் படுகை, முதல் வகையைச் சார்ந்தது. காவிரி படுகையிலிருந்து எரிவாயு எடுப்பது புதிதல்ல. கும்பகோணம் அருகில் உள்ள குத்தாலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது. ஆனால் குத்தாலத்தில் எரிவாயு எடுப்பது வழமையான (மரபு)(conventional) வளத்திலிருந்து (resource) எடுப்பதாகும். புதிதாக வரவுள்ள, வழமைசாரா (மரபுசாரா-unconventional) வளத்திலிருந்து எரிவளங்களை எடுக்கும் திட்டத்தினையே ‘ஹைட்ரோ கார்பன் திட்டம்’ என அழைக்கிறோம்.
ஹைட்ரோகார்பன் திட்டம் என்றால் என்ன?
முதல் அம்சம் : மைய அரசின் ஹைட்ரோகார்பன் உரிமக் கொள்கை (Hydrocarbon exploration licensing policy), என்ற திட்டத்தின் படி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் குடைந்து எடுக்கும் போது கிடைக்கும் அனைத்து பெட்ரோலிய பொருட்கள் (திரவ வடிவம்- shale oil, வாயு வடிவம்- shale gas, மீத்தேன், திட வடிவம்- gas hydrates) எந்த வடிவத்திலும் எடுப்பதற்கான அனுமதியை ஒரே பொது உரிமத்தில் பெறலாம். இது தான் ஹைட்ரோகார்பன் திட்டம். இதற்கு முன்பு இருந்த புதிய ஆய்வு உரிமக் கொள்கைப்படி (New exploration licensing policy) மீத்தேன் எடுக்க தனியாக உரிமம் பெற வேண்டும், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தனியாக உரிமம் பெற வேண்டும். அந்த நிலையை மாற்றி, இயற்கை வளத்தை விரைவாக சுரண்டுவதற்காக, நிறுவனங்களுக்கு சாதகமாக, அவர்களின் வருவாயை பெருக்குவதற்கான ‘மூலதன லாப வேட்டையை மட்டுமே குறிக்கோளாக கொண்டதுதான் இந்த பொது உரிமக் கொள்கை (Uniform licensing policy). இது ஹைட்ரோகார்பன் திட்டத்தின் முதல்படி.
இரண்டாவது அம்சம் : திறந்தவெளி ஏக்கர் கொள்கை. திட்டம் செயலாக்குவதற்கான இடத்தை முன்பு அரசு பட்டா போட்டு கொடுத்து வந்தது, இப்போது எண்ணெய் நிறுவனங்கள் தானாகவே தனக்கு தேவையான பகுதியை வடிவமைக்கலாம் (Open acreage policy). அப்படி ஆய்வு மற்றும் உற்பத்திக்கான வட்டாரத்தை தானே வடிவமைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கும் போது ஏலத்தின் போது அந்நிறுவனத்திற்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.
மூன்றாவது அம்சம் : ஹைட்ரோகார்பன் உற்பத்தி வருவாயில் அரசுக்கு பங்கு அளிக்க வேண்டும். எந்த நிறுவனம் அதிக பங்கு அளிக்கும் என்று உறுதிப்படுகிறதோ அந்நிறுவனத்திற்கு ஏலத்தில் குறிப்பிட்ட வட்டாரம் (Block)வழங்கப்படும்.
நான்காவது அம்சம்: சந்தைப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணய உரிமை முழுக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் நியமிக்கப்பட்ட பகுதியில், அவர்கள் வடிவமைத்துக்கொண்ட வட்டாரத்தில் எந்த வகையான ஹைட்ரோகார்பனையும் எடுக்கலாம், விற்கலாம். மொத்த வருமானத்தில் பங்கு மட்டும் வேண்டும் என்பதுதான் அரசின் அணுகுமுறையாக இருக்கிறது. நாசமாக்கும் இரண்டு தொழில்நுட்பங்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் இரண்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
1. மீத்தேன் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்
(Methane extraction- Coal bed methane)
2. நீரியல் முறிவு (அ) நீரியல் விரிசல்
(Hydraulic fracturing – Shale gas/Shale oil)
மீத்தேன் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்
நிலக்கரிப் படுகையில் இருந்து மீத்தேன் எரிவாயு பிரித்தெடுக்க காவிரி டெல்டா பகுதியில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் (Great Eastern energy Corporation Limited) உரிமம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் உரிமம் பெற்ற பகுதி திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் அம்மாபேட்டை, ஆடுதுறை, நாச்சியார்கோவில், குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளாகும். இத்திட்டம் அமையும் பரப்பளவு 66,700 ஹெக்டேர் (667 சதுர கி.மீ) நிலத்தின் மேற்பரப்பிலிருந்து நிலக்கரி மடிப்பை (coal seam) அடைய 300-1500 மீ ஆழமான கிணறு குடையப்படும். அவ்வாறு குடையும்போது நிலத்தடி நீர் வெளியேற்றப்படும். மொத்த நீரையும் வெளியேற்றிய பின் நிலக்கரி மடிப்பின் அழுத்தம் குறைந்து மீத்தேன் வாயு குழாயின் வழியே வெளியேறும். மடிப்பின் அழுத்தத்தை குறைவாக வைத்துக்கொள்ள தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்படும். இவ்வாறு தண்ணீரை வெளியேற்றும் போது அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கும். வெளியேறும் தண்ணீர் நச்சு தன்மை வாய்ந்ததாக இருந்தால் அந்த நச்சு நீரை அருகில் உள்ள இதற்காகவே அமைத்த கழிவு கிணற்றிற்குள் செலுத்துவார்கள். சில சமயங்களில் அருகில் உள்ள ஆற்றிலும் விடப்படும். அதுமட்டுமல்லாமல் இந்த வகையான நிலக்கரிக் கிணற்றில் மீத்தேன் எரிவாயு உற்பத்தி வேகமாக சரியும். ஆகவே உற்பத்தியை தொடர்ந்து நீட்டிக்க பல கிணறுகளை அருகருகே தோண்ட வேண்டிய தேவை ஏற்படும். ஆக இத்தொழில்நுட்பத்தில் அதிக தண்ணீர் வெளியேற்றப்படுவதோடு அதிக கிணறுகள் தோண்ட வேண்டிய தேவை ஏற்படுவதால் அதிக பரப்பளவு கொண்ட இடம் தேவைப்படும் . இப்படிப்பட்ட திட்டம் காவிரி டெல்டா விவசாயத்தையும், நிலத்தையும், வளத்தையும் கடுமையாக பாதிக்கும், மண் உழவுக்கு பயனற்றதாக மாறும்.
நீரியல் விரிசல் முறை (Hydraulic fracturing)
நிலத்திற்கடியில் சில ஆயிரம் அடி ஆழத்தில் களிமண் பாறைகள் (shale rocks) உள்ளன. இது ஒரு வித படிவுப்பாறை (Sedimentary rocks). பல்லாயிரம் ஆண்டுகளாக செடிகொடிகள், விலங்குகள் மக்கிபோய் பின்னர் மண் மற்றும் பாறை அடுக்குகள் மற்றும் நிலத்தின் மேற்பரப்பால் அமிழ்ந்து, இவற்றின் வெப்பம் மற்றும் அழுத்தத்தினால் களிமண் பாறைகள் உருவாயின. இப்படிப்பட்ட களிமண் பாறையின் இடுக்குகளில் பெட்ரோலிய பொருட்கள் (Hydrocarbon)இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை கிணறு அமைத்து நேரடியாக குடைந்து எடுக்க முடியாது. அந்தப் பாறைகளை முறிக்க வேண்டும், அப்படி முறிக்கும் போது விரிசல் ஏற்பட்டு (பாறையிடுக்கு வாயு) ஷேல் கேஸ் வெளிவரும். முதலாவதாக கிணறு மூன்று முதல் ஐந்து கி.மீ ஆழம் வரை (சுமார் 10 ஆயிரம் அடி முதல் 15 ஆயிரம் அடி ஆழம்) குடையப்படும். பின்பு பக்கவாட்டில் மேலும் ஒரு கி.மீ குடையப்படும். களிமண் பாறைகளை அடைந்த பின் மேலிருந்து கிணற்றில் பொருத்திய குழாயின் வழியே நன்னீர், மணல், பல விதமான வேதிப்பொருட்கள் கொண்ட கலவை 300 - 600 ‘பார்’ அழுத்தத்தில் (பார் ( bar) என்பது அழுத்தத்தை குறிக்கும் அளவீடு) கிணற்றில் செலுத்தப்படும். இது நிலத்தின் மேற்பரப்பிலும் சிறு சிறு நில அதிர்வுகளையும் ஏற்படுத்தும். இக்கலவை பாறையை மோதும் போது பாறைகளில் விரிசல் ஏற்பட்டு ஷேல் கேஸ் வெளியேறும்.அதே நேரத்தில் உள்ளே செலுத்திய நச்சு கலந்த நீரும் வெளியேறும். இந்த நச்சு நீரை கையாள்வதற்காகவே தனியாக கிணறு (disposal well) அமைக்கப்படும். தேவைப்படாத நச்சு நீர் அந்த கிணற்றில் செலுத்தப்படும். சில நேரங்களில் நச்சு நீர் ஆற்றிலோ கடலிலோ கூட விடப்படும்.
இந்த நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தில் வழமையான கிணற்றிற்கு தேவைப்படும் நீரை விட 2000 முதல் 10000 மடங்கு அதிகம் தேவைப்படும். ஒரு கிணற்றின் நீரியல் விரிசல் முறையில் பத்து லட்சம் லிட்டர் முதல் இரண்டு கோடி லிட்டர் வரை நன்னீர் தேவைப்படும். அதுமட்டுமல்லாமல் 600 வகையான 80 முதல் 300 டன் எடையளவு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படும். தற்போது காவிரிப் படுகையில் கடற்பகுதியும் சேர்த்து 5573 சதுர கி .மீ பரப்பளவில் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி மற்றும் ஐ.ஒ. சி.எல் நிறுவனங்களுக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட கிணறுகள் அமைக்க உரிமம் அளித்துள்ளது மத்திய அரசு. வெறும் இரண்டு சுற்று முடிவில் இத்தனை கிணறு அமைக்க உரிமம் அளித்துள்ள நிலையில், மேலும் பல சுற்றுகள் வாயிலாக எண்ணற்ற கிணறுகளுக்கு உரிமம் கொடுக்க மைய அரசு துடியாய்த் துடிக்கிறது. ஒரு கிணற்றுக்கு இரண்டு கோடி லிட்டர் தேவைப்படும் என்றால் முந்நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகளுக்கு எவ்வளவு நன்னீர் தேவைப்படும் ? இது மட்டுமில்லாமல் மண் தேவையும் உண்டு . அது எந்த ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் ? நன்னீர், மணல், வேதிப்பொருட்கள், கழிவுகள் இவை கனரகவண்டிகள் மூலம் கொண்டு வரப்படும். கனரக வண்டிகள் போக்குவரத்து காரணமாக கிராமப்புற சாலைகள், பாலங்கள் சேதமடையும். காற்று முற்றிலும் மாசுபடும். இந்த அபாயகர திட்டத்தால் நிலம் மாசுபடும். நீர் மாசுபடும். விவசாயம் சீர்குலையும். உணவு உற்பத்தி பாதிக்கும். மக்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பறிபோகும். நிலத்திற்கடியில் சில ஆயிரம் அடி ஆழத்தில் களிமண் பாறைகள் (shale rocks) உள்ளன. இது ஒரு வித படிவுப்பாறை (Sedimentary rocks). பல்லாயிரம் ஆண்டுகளாக செடிகொடிகள், விலங்குகள் மக்கிபோய் பின்னர் மண் மற்றும் பாறை அடுக்குகள் மற்றும் நிலத்தின் மேற்பரப்பால் அமிழ்ந்து, இவற்றின் வெப்பம் மற்றும் அழுத்தத்தினால் களிமண் பாறைகள் உருவாயின. இப்படிப்பட்ட களிமண் பாறையின் இடுக்குகளில் பெட்ரோலிய பொருட்கள் (Hydrocarbon)இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை கிணறு அமைத்து நேரடியாக குடைந்து எடுக்க முடியாது.
அந்தப் பாறைகளை முறிக்க வேண்டும், அப்படி முறிக்கும் போது விரிசல் ஏற்பட்டு (பாறையிடுக்கு வாயு) ஷேல் கேஸ் வெளிவரும். முதலாவதாக கிணறு மூன்று முதல் ஐந்து கி.மீ ஆழம் வரை (சுமார் 10 ஆயிரம் அடி முதல் 15 ஆயிரம் அடி ஆழம்) குடையப்படும். பின்பு பக்கவாட்டில் மேலும் ஒரு கி.மீ குடையப்படும். களிமண் பாறைகளை அடைந்த பின் மேலிருந்து கிணற்றில் பொருத்திய குழாயின் வழியே நன்னீர், மணல், பல விதமான வேதிப்பொருட்கள் கொண்ட கலவை 300 - 600 ‘பார்’ அழுத்தத்தில் (பார் ( bar) என்பது அழுத்தத்தை குறிக்கும் அளவீடு) கிணற்றில் செலுத்தப்படும். இது நிலத்தின் மேற்பரப்பிலும் சிறு சிறு நில அதிர்வுகளையும் ஏற்படுத்தும். இக்கலவை பாறையை மோதும் போது பாறைகளில் விரிசல் ஏற்பட்டு ஷேல் கேஸ் வெளியேறும்.அதே நேரத்தில் உள்ளே செலுத்திய நச்சு கலந்த நீரும் வெளியேறும். இந்த நச்சு நீரை கையாள்வதற்காகவே தனியாக கிணறு (disposal well) அமைக்கப்படும். தேவைப்படாத நச்சு நீர் அந்த கிணற்றில் செலுத்தப்படும். சில நேரங்களில் நச்சு நீர் ஆற்றிலோ கடலிலோ கூட விடப்படும். இந்த நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தில் வழமையான கிணற்றிற்கு தேவைப்படும் நீரை விட 2000 முதல் 10000 மடங்கு அதிகம் தேவைப்படும். ஒரு கிணற்றின் நீரியல் விரிசல் முறையில் பத்து லட்சம் லிட்டர் முதல் இரண்டு கோடி லிட்டர் வரை நன்னீர் தேவைப்படும். அதுமட்டுமல்லாமல் 600 வகையான 80 முதல் 300 டன் எடையளவு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படும். தற்போது காவிரிப் படுகையில் கடற்பகுதியும் சேர்த்து 5573 சதுர கி .மீ பரப்பளவில் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி மற்றும் ஐ.ஒ. சி.எல் நிறுவனங்களுக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட கிணறுகள் அமைக்க உரிமம் அளித்துள்ளது மத்திய அரசு. வெறும் இரண்டு சுற்று முடிவில் இத்தனை கிணறு அமைக்க உரிமம் அளித்துள்ள நிலையில், மேலும் பல சுற்றுகள் வாயிலாக எண்ணற்ற கிணறுகளுக்கு உரிமம் கொடுக்க மைய அரசு துடியாய்த் துடிக்கிறது. ஒரு கிணற்றுக்கு இரண்டு கோடி லிட்டர் தேவைப்படும் என்றால் முந்நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகளுக்கு எவ்வளவு நன்னீர் தேவைப்படும் ? இது மட்டுமில்லாமல் மண் தேவையும் உண்டு . அது எந்த ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் ? நன்னீர், மணல், வேதிப்பொருட்கள், கழிவுகள் இவை கனரகவண்டிகள் மூலம் கொண்டு வரப்படும். கனரக வண்டிகள் போக்குவரத்து காரணமாக கிராமப்புற சாலைகள், பாலங்கள் சேதமடையும். காற்று முற்றிலும் மாசுபடும். இந்த அபாயகர திட்டத்தால் நிலம் மாசுபடும். நீர் மாசுபடும். விவசாயம் சீர்குலையும். உணவு உற்பத்தி பாதிக்கும். மக்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பறிபோகும்.
மத்திய அரசின் கொடூரத் திட்டம்
ஆனால் மைய அரசோ ஷேல் கேஸ் உற்பத்தியால் எரிவாயு இறக்குமதியை குறைக்கலாம் என நினைக்கிறது. அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிடுவது மிகவும் கொடூரமானது . வளர்ச்சி அடைந்த, குறைந்த மக்கள் தொகை கொண்ட , அதிக நிலப்பரப்பை கொண்ட நாட்டுடன் அதற்குமாறான ஒரு நாட்டை ஒப்பிடுவது நியாயமற்றது. அப்படிப்பட்ட அமெரிக்காவிலே கூட இந்த ஷேல் கேஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பதை நியூயார்க், மேரிலாண்ட் மாகாணம் ஷேல் கேஸ் உற்பத்திக்கு விதித்த தடையின் மூலமாக அறியலாம். ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள விக்டோரியா மாகாணமும் அதே போன்ற தடையை விதித்துள்ளது. வளர்ந்த நாடான அமெரிக்காவில் இந்த நீரியல் விரிசல் முறையில் எரிவாயு எடுப்பதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதிப்பை சரி செய்ய பட்ஜெட்டில் பெரும் பங்கு செலவிட நேர்வதால் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், அடிப்படை வசதிகளே எல்லோருக்கும் முழுமையடையாமல் இருக்கும் நிலையில் இந்த திட்டத்தை இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டம் என்று செயல்படுத்த முயல்வது மக்களை ஏமாற்றும் செயலே. தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் போராடி வருகின்றனர். இப்பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். அந்த முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். காவிரி டெல்டா படுகையை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையையும் அரசு ஏற்க வேண்டும்.
கட்டுரையாளர் : மின் பொறியாளர்