tamilnadu

img

நூறு கி.மீ.வேகத்தில் மோடி அழிவுப்பாதையில் ரயில்!

ரயில்வே துறையின் தனியார்மயப் பேரழிவு நாட்டையும் நாட்டு மக்களையும் பெரிதும் பாதிக்கும். அதனால் மக்களை திரட்டியும், ரயில்வே  ஊழியர்களை திரட்டியும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தும் பெரும்பங்கு ரயில்வே பெடரேஷன்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் உண்டு.  அந்த புனிதமான பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்பது இந்திய மக்களின்  எதிர்பார்ப்பாகும். 

நம்மையாண்ட பிரிட்டிஷ்காரன் நமது கனிம வளங்களை செல்வங்களை கொண்டு செல்வ தற்காகவும், சுதந்திர போராட்டத்தை அடித்து நொறுக்கிட ராணுவத் தளவாடங்களை நாடு முழுவதும் கொண்டு செல்லவுமே போடப்பட்டது தான்  இருப்புப் பாதை.  இந்தியாவின் முதல் ரயில் வண்டி 1853 ஏப்ரல் 16 பிற்பகல் 3.30- க்கு போர்பந்தர் (பம்பாய்) ரயில் நிலையத்தில் இருந்து தானேக்கு 14 பெட்டிகளுடன் 34 கிமீ தொலைவை 57 நிமிடங்களில் கடந்து சென்றது. மூன்று நீராவி  எஞ்சின்கள் இழுத்து சென்றன. இந்திய இருப்பு பாதைகள் அமைப்பு  ஆசியாவிலே பெரியது. உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இன்று  ஆளும்  ஆட்சியாளர்களால் ரயில்வே துறை சிதைக்கப்பட்டு சீரழிகிறது.  துவக்கத்தில் கம்பெனிகளாகவும் தனியார் நிறுவனங்களுமாக  இருந்த ரயில்வே 1951 இல் நாட்டு டமையாக்கப்பட்டது. இந்த ரயில்வே துறை சிறப்புடன் செயல்பட தனியாக ரயில்வே பட்ஜட்  உருவாக்கப் பட்டது. புதிய ரயில் பாதைகள், அகல ரயில்பாதைகள் ஷெட்டு,ஷாப்கள், இஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலைகள் என விரிவடைந்தது. சுதந்திரத்திற்கு பிறகு வெள்ளக் காரனால் விட்டு சென்ற  அழிவில்லா சொத்தான ரயில்வே, மக்களின் சேவைக்காக முழுவதுமாக மாற்றப்பட்டது. குறைந்த கட்டணத்தில்,  எளிமையான சகல வசதிகளுடன் ரயில் இந்திய மக்களுக்கு  அர்ப்பணிக்கப்பட்டது. 18 லட்சம் ஊழியர்கள் பணி செய்திடும் பெரிய நிறுவனமாக வளர்ச்சி பெற்று நீராவி எஞ்சின், டீசல், மின்சார  இஞ்சினாக பரிணாம வளர்ச்சி பெற்று  இரட்டைப் பாதைக ளாக செயல்படுகிறது.  முதலாளித்துவ கொள்கையுடன் செயல்பட்ட நமது அரசு நாட்டின் வளர்ச்சிக்காக வெளி நாடுகளில் கையேந்தியது. அதனால் பொருளாதாரச் சிக்கலில் மத்திய அரசு சிக்கியது. அப்போது நமக்கு நண்பருக்கு நண்பராக  உற்ற தோழனாகயிருந்து உதவி செய்து நம்மை பாது காத்த சோவியத் யூனியன் 1992இல் பின்னடைவைச் சந்தித்தது. இதன் விளைவாக நமது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.  அதனால்  உலகவங்கி,  ஐஎம்எப்-பில் கடன் வாங்கியது மத்திய அரசு. கடனுக்காக போடப்பட்ட நிபந்தனை களை அப்போதிருந்த காங்கிரஸ் கட்சி சிரமேற் ஏற்றுக் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பேரில்  உலகமயம், தாராளமயம், தனியார்மயப் பாதையில் பயணிக்கத் துவங்கியது. இதனால் நாட்டில் புதிய பொருளாதார கொள்கைகளினால் வேலையின்மை, உரிமை பறிப்புகள், தனியார்மயம் ஆட்குறைப்பு, வேலைப் பளு உயர்வு  என கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. 

100 கி.மீ. வேகத்தில் மோடி
தனியார்மயத்தை துவங்கிட காங்கிரஸ் அரசு ரயில்வேயை தேர்வு செய்து களமிறங்கியது. நிதி மந்திரி யாக இருந்த மன்மோகன்சிங் தொடங்கி பிரதமர் மன்மோகன் சிங்காக இருக்கும் வரை ரயில்வேயில் தனியார்மயத்தை அமல்படுத்திட ராகேஷ் மோகன் கமிட்டி, கீதா கிருஷ்ணன் கமிட்டி என கமிட்டிகளின் பரிந்துரைகளை ஏற்று தனியார்மய வேலைகளை வேகப்படுத்தி ரயில்வேயை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ய துவங்கினார்கள். 1992 முதல் துவங்கப்பட்ட தனியார்மயம் 2014 வரை 40 கிமீ வேகத்தில் சென்றது. 2014இல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு 100 சதவீதம் ரயில்வேயில் தனியார்மயத்தை கொண்டு வருவோம் என்று சபதம் எடுத்தார். 22 வருடங்களாக தொடர்ந்த தனியார்மயம் ஐந்து வருடங்க ளில் 100 கிமீ வேகத்தில் பயணித்து 90 % தனியார்மய வேலைகளை முடிவுக்கு கொண்டு வந்தார் மோடி.  அரசு துறை நிறுவனங்கள், பொதுத் துறைகள் அரசிடம் இருக்க வேண்டாம், அது அரசின் வேலையல்ல என்ற கொள்கையை கொண்ட பாஜக அரசு அனைத்தையும் தனியாருக்கு கொடுத்திட அசுர வேகத்தில் செல்கின்றது. எல்ஐசி, வங்கி, தொலைபேசி, பொதுத்துறைகளை தனியா ருக்கு கொடுக்க முடிவெடுக்கும் போது அதை எதிர்த்து வீறுகொண்டு எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் தனியார்மயத்தை தடுத்து நிறுத்தின. அதனால் மோடி தனியார்மயத்தை அடக்கி வாசித்தார். ஆனால் போராட்டங்கள் இல்லாமல் நிசப்தமாக இருந்த ரயில்வே யில் தனியார்மயத்தை கொண்டு வர முடிவு எடுத்து முதலில் ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தார். ஏற்கனவே இருந்த இரண்டு ரயில்வே மந்திரி களை தனியார்மயத்தை வேகமாக கொண்டு செல்ல மாற்றி விட்டு பியூஸ்கோயலை கொண்டு வந்தார். இதற்காக விவேக் தேப்ராய் கமிட்டியை விரைவாக அமைத்து குறுகிய நாட்களில் பரிந்துரைகளை பெற்று தனியார் மயத்தை வேகப்படுத்தினார்.

பென்சனை பறித்த வாஜ்பாய் அரசு
விவேக் தேப்ராய் கமிட்டி சிபாரிசுகள் அமலாகும் போது எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் ரயில்வேயில் உள்ள பெடரேஷன்கள் ஏஐஆர்எப், எஸ்ஆர்இஎஸ் (மஸ்தூர் யூனியன் --சங் யூனியன்) அடிமைப்புத்தியுடன் அமைதி யாக இருந்தன. மத்திய அரசு ஊழியர்களின் பென்ஷன் வாழ்க்கையை பறித்து பென்ஷன் இல்லாமல் வெளியே றும் நிலைமையை 22.12.2003 இல் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இருந்த பாஜக அரசு புதிய பென்ஷன் திட்டம் என்ற பேரில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் பென்ஷனை இழப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டே இந்த திட்டத்தை அமல்படுத்திடும் கமிட்டியில் மஸ்தூர், சங் யூனியன்களின் தலைவர்கள் எட்டு வருடங்களாக ஆதரவு கொடுத்து போராட்டங்களை நடத்தாமல் மத்திய அரசுக்கு பாதுகாப்பு அளித்தனர்.  புதிய பென்ஷன் திட்டம் மற்றும் தனியார்மயத்தை எதிர்க்காமல் இருந்த பெடரேஷன்களின் போக்கை புரிந்து கொண்டும், 7வது சம்பளக் கமிஷனில் எதையும் கொடுக்காத மோடி அரசை எதிர்த்து நடத்தயிருந்த வேலை நிறுத்தத் தையும் மஸ்தூர் யூனியன் தலைவர் கண்ணையா மூலம் மிரட்டி வாபஸ் வாங்க வைத்த மோடி மீண்டும் துணிச்ச லுடன் தனியார்மயத்தை இன்னும் வேகப்படுத்தினார். தனியார்மயத்திற்கு எதிராக நடந்த மத்திய அரசு ஊழி யர்கள் கூட்டமைப்பு நடத்திய 3 வேலைநிறுத்தத்திலும் ரயில்வே பெடரேஷன்கள் கலந்து கொள்ளாதது மேலும் மோடி அரசுக்கு வலு சேர்த்தது.

காலியிடங்களை நிரப்பாமல்...
ரயில்வேயில் தனியார்மயத்திற்கு வசதியாக ஆட்குறைப்பை செய்வதற்காக புதிய வேலை நியமனங்க ளை மோடி அரசு செய்யவில்லை. ஆர்ஆர்சி, ஆர்ஆர்பி தேர்வுகளை ஐந்து வருடங்களாக நடத்தவில்லை. ஓய்வு பெறுபவர்கள், இறந்தவர்கள் காலியிடங்களை நிரப்பாமல் 2.75 லட்சம் காலியிடங்கள் நிரப்பாமல் காலம் கடத்தப் பட்டது. காலியிடங்களில் 7 லட்சம் காண்ட்ராக்ட் ஊழியர்க ளும், ஓய்வு பெற்ற ஊழியர்களை காண்ட்ராக்ட் முறையிலும் வேலை வழங்கி வருகிறது. வேலைப்பளு, உரிமை பறிப்புகள், அனைத்தும் கனஜோராக பெடரேஷன்களின் ஆதரவோடு கனகச்சிதமாக நடந்து வருகிறது.  டிக்கெட் விற்பனை, முன்பதிவு, உணவகங்கள், கிளினிங், தண்டவாள பராமரிப்பு வேலைகள் என அனைத்தும் தனியாருக்கு போய்க் கொண்டிருக்கும் போது பெடரே ஷன்கள் வாய் மூடி மெளனம் காத்தன. ரயில்வேயில் வேலை நிறுத்தத்திற்காக பயந்து கொண்டிருந்த மோடிக்கு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதினால் பெடரேஷன் களின் மதிப்பும் மரியாதையும் காற்றில் பறந்தது. இதற்கிடையில் 17 ஆவது மக்களவை தேர்தலில் மோடி அரசு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதினால் பதவி யேற்று பத்து நாட்களில் ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்க நூறு நாள் திட்டத்தை வெளியிட்டு கெடு வைத்து இருக்கிறது மோடி அரசு.

ஆபத்தான அம்சங்கள்...
பாசஞ்சர் வண்டிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது, பயணக் கட்டணங்களை உயர்த்துவது, கட்டணச் சலுகைகளை வெட்டுவது, ஷாப், ஷெட்டுகளை தனியாரி டம் கொடுப்பது, ஊழியர்களை உபரியாக்குவது போன்றவை நூறு நாள் திட்டத்திலுள்ள ஆபத்தான அம்சங்களாகும். இதன் மூலம் ரயில்வே மீண்டும் தனியார் நிறுவனங்களை தேடி ஓடுகிறது.  நூறு நாள் திட்டத்தை எதிர்த்து கண்டன அறிக்கையோ, வலுவான போராட்டங்களையோ, அறிவிக்காமல் பெடரே ஷன்கள் வாய் மூடி இருக்கின்றன. ரயில்வேயில் தனியார் மயத்தை காங்கிரஸ் கட்சி முதல் பாஜக ஆட்சியிலும் எதிர்த்து வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தாமல் அரசுக்கு ஆதரவாக விட்டுக் கொடுத்து வந்த பெடரே ஷன்கள் ஏஐஆர்எப், என்எப்ஐஆர் (மஸ்தூர் --சங்) ஆகிய வற்றின் சுயநல த்தால் இன்றைக்கு பெரும் அழிவை நோக்கிச் செல்கிறது ரயில்வே துறை.  ரயில்வே துறையின் தனியார்மயப் பேரழிவு நாட்டையும் நாட்டு மக்களையும் பெரிதும் பாதிக்கும். அதனால் மக்களை திரட்டியும், ரயில்வே ஊழியர்களை திரட்டியும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தும் பெரும்பங்கு ரயில்வே பெடரேஷன்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் உண்டு. அந்த புனிதமான பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்பது இந்திய மக்களின் எதிர்பார்ப்பாகும்.  

கட்டுரையாளர் : டிஆர்இயு துணைத்தலைவர்