tamilnadu

img

உலக தடகளம் 400மீ : தங்கம் வென்ற பக்ரைன் வீராங்கனை

உலக தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பக்ரைன் நாட்டை சேர்ந்த சல்வா எய்ட் நாசர் தங்க பதக்கத்தை தட்டி சென்றார்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் 400 மீட்டருக்கான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பக்ரைன் வீராங்கனை சல்வா எய்ட் நாசர் 48.14 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இதனடிப்படையில் தங்கபதக்கத்தை வென்ற இவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை அதிவேகமாக கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் பெற்றார். இரண்டாவதாக வந்த ஒலிம்பிக் சாம்பியனான பகாமஸ் வீராங்கனை ஷானெ மில்லர் உய்போ வெள்ளிப்பதக்கம் வென்றார்.
 

;