தஞ்சாவூர், மார்ச் 2- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுப்பிரமணியர் கோயில் தெருவைச் சேர்ந்த வர் தருமர் மகன் காளிமுத்து (27). இவர் தஞ்சாவூர் மணி மண்டபம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி, காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றி வந்தார். இவர், திங்கள்கிழமை காலை குளிக்க சென்ற போது எலக்ட்ரிக் ஹீட்டர் கருவி யைத் தொட்டவர் மீது மின்சா ரம் பாய்ந்தது. இதில் அவர், அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சை தெற்கு காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.