tamilnadu

img

உலக சித்தர் தினம் கடைப்பிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் உலக சித்தர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அலுவலர் பாஸ்கர் தலைமை வகித்தார். சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மருந்தாளுநர் ரமேஷ், பன்னீர்செல்வம்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.  அகத்திய முனிவர் பிறந்த தினம் வருடந்தோறும் ஆயில்ய நட்சத்திரத்தன்று, உலக சித்தர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சித்த மருத்துவத்தின் மகத்துவம் குறித்து சிறப்புரை வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

;