சென்னை, ஆக.29- வங்கியை தனியார்மயத்தை நியாயப்படுத்தி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலை வர் கூறியிருப்பதை பகிரங்கமாக திரும்பப் பெற வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. “சில பொதுத்துறை வங்கிகளை தனியார் மயப்படுத்துவது, வங்கித்துறைக்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எந்த ஒரு நிறு வனமும் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது தான் வலியுறுத்தப்பட வேண்டுமேயன்றி, யாரால் நிர்வகிக்கப்படுகிறது என்பது வலி யுறுத்தப்பட வேண்டியதில்லை” என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் ரஜனீஷ் குமார் கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 24 தேதியிட்ட பிஸினஸ் லைன் பத்திரிக்கையில் ரஜனீஷ் குமாரின் அறிக்கை களாக மேலும் சில கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
“எந்த ஒரு நிர்வாகமும் எவர் வசம் இருக்கி றது என்பது ஒரு பொருட்டேயல்ல என்பதுதான் எனது கருத்து. அரசாங்கம் 55 சதவிகிதம் பங்கு களை வைத்திருக்கிறதா அல்லது 40 சதவிகி தம் பங்குகளை வைத்திருக்கிறதா என்பதை விட, எந்த ஒரு நிறுவனமும் எவ்வாறு நிர்வகிக் கப்படுகிறது என்பதை வலியுறுத்துவது தான் பொருள் பொதிந்தது”. “வங்கிகளின் இணைப்பிற்குப் பிறகான தற்போதைய சூழலில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஆறு பெரிய பொதுத்துறை வங்கிகள் அரசாங்கத்தின் சமூகப் பொறுப்பினை கவனித்துக் கொள்ள போதுமானவை. மற்ற வங்கிகள் தனியார்மயமாக்கப்படலாம்” என அவர் கூறியுள்ளார். பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள எஸ்பிஐ தலைவரின் இந்த அறிக்கையினை, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாக கண்டித்துள்ளது.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ் மாநிலக் குழுவின் தலைவர் டி.தமிழரசு, பொதுச் செயலாளர் என்.ராஜகோபால் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில், தேசத்தின் கோடிக்க ணக்கான சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை யை உயர்த்துவதில், எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பை எஸ்பிஐ தலைவர் நன்கு அறிவார். மோச மான நஷ்டத்தில் திவாலாகிச் சரிந்த பல தனி யார் வங்கிகள், பொது மக்களின் சேமிப்பை பாது காப்பதற்காக, பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்ட வரலாறுகளையும் அவர் நன்கு அறிவார். தேசத்தின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியின் தலைவர், பொதுத்துறை வங்கி களை தனியார்மயப் படுத்துவதை வலியுறுத்தி, ஆதரவாக வெளியிட்டுள்ள கருத்துகள் ஏற்பு டையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்கள் இடையே, தனியார் வங்கி களில் சேமிப்பு வைப்பதில் அச்சம் நிலவி வரு கின்றது. இந்நிலையில், எஸ்பிஐ தலைவரின் மேற்கண்ட இந்த பத்திரிக்கை செய்தி, உழைத்துச் சேர்த்த தங்களது வாழ்நாள் சேமிப்பை பொதுத்துறை வங்கிகளில் வைத் துள்ள எண்ணற்ற பொதுமக்களை குழப்பத் திற்கு உள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும், லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் உணர்வுகளை புண் படுத்துவதாய் உள்ளது. இத்தகைய பிற்போக்குத்தனமான கருத்துடைய அவர், தான் வகிக்கும் பதவிக்கு எவ்விதம் நியாயம் கற்பிக்க முடியும் எனும் கேள்வி முன்னுக்கு வரு கிறது எனவும் அவர்கள் சாடியுள்ளனர். இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், மத்திய அரசின் எந்த ஒரு பொதுத்துறையையும் தனி யார்மயப்படுத்தும் முயற்சிகளை பொதுவாக எதிர்த்தே வருகின்றது. குறிப்பாக, பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை, சமரசமின்றி வலு வாக எதிர்க்கின்றது; பத்திரிக்கை செய்திகளில் இடம்பெற்றுள்ள ரஜனீஷ் குமாரின் மேற்கண்ட கருத்துக்களை கண்டிப்பதுடன், பகிரங்கமாக திரும்பப் பெற வேண்டுமென வலுவாக கோரு கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.