தஞ்சாவூர், பிப்.2– தஞ்சாவூர் அடுத்த தேவராயர்பேட்டை உட்பட்ட கிடங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.ராம லிங்கம் (62), விவசாயி. ராமலிங்கம் சனிக்கிழமை மாலை அவரது பழைய வீட்டின், பின்புறம் புதிய தாக மற்றொரு வீடு கட்டுவதற்காக, தொழிலாளர் களைக் கொண்டு பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது, இரண்டு சிலைகள் இருப்பதை தொழிலாளர்கள், ராமலிங்கத்திடம் தெரிவித்தனர். சிலை குறித்து, ராமலிங்கம் பாபநாசம் வட்டாட்சியர் கண்ணனுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கண்ணன் சிலையை கைப்பற்றி, விசாரணை நடத்தினார். அதில், சிலை களில் ஒன்று 3 அடி உயர விஷ்ணு சிலையும், 2 அடி உயர அம்பாள் சிலையும் என தெரியவந்தது. சிலைகள் குறித்து மேலும் விசாரணை நடைபெறு கிறது.