கும்பகோணம், மார்ச் 18 - தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியம் நாச்சியார்கோ வில் ஊராட்சியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். இதில் நாச்சியார்கோ விலைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களிலிருந்து காய்கறி, மளிகைப் பொருட்கள், வீட்டு உப கரண பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்வதும் பொதுமக்கள் வாங்கிச் செல்வதும் வழக்கமாக இருந்து வந்தது . இந்நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நட வடிக்கைக்காக நாச்சியார் கோவி லில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது என நாச்சி யார்கோவில் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தலைவர் மகேஸ் வரி உமா சங்கர் அறிவித்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு தந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை வாரச் சந்தைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.