tamilnadu

img

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், பிப்.5- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவக்கக் கோரி அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பாக கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.கண்ணன்,  தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டு வன், பணிமனை தலைவர் சாமிநாதன், சோமு தலைவர் பாலசந்திரன்,  தொமுச தேவேந்தி ரன் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினர்.