கும்பகோணம், பிப்.5- தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் நடைபெற்ற வங்கி பெண் ஊழியர் பாலி யல் வன்முறை வழக்கின் தீர்ப்பை வரவேற்று கும்ப கோணம் மீன் மார்க்கெட் அரு கில் திறந்தவெளி கருத்தரங் கம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். அங் கன்வாடி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு கலா வரவேற்புரை ஆற்றினார். மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, சிஐடியு மாநிலச் செயலாளர் ஜெயபால், உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக் குழு பிரேமலதா, மாதர் சங்க மாவட்டத் தலை வர் கலைச்செல்வி, அனைத்து ஓய்வூதியர் சங்க மகளிரணி கலைச்செல்வி, ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகோபாலன், வங்கி ஊழி யர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் குமார், மாநில இணைச்செயலாளர் அஸ் வந்த், சிஐடியு மாவட்டப் பொ ருளாளர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.