செங்கல்பட்டு, மார்ச் 27- செங்கல்பட்டு பகுதியில் செயல் படாமல் இருந்த மத்திய பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் பயோ டெக் நிறுவனத்தில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பயன்ப டுத்தும் கிருமிநாசினியான (சானிடைர் திரவம்) தயாரிக்க எச்எல்எல் தலைமை நிறுவனம் மூலம், கேரள அரசு உத்த ரவு வழங்கியுள்ளது.
100 ஏக்கர்...
செங்கல்பட்டு மாவட்டம், திருக் கழுக்குன்றம் ஒன்றியம் திருமணி கிரா மத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு மூலம் எச்பிஎல் நிறுவனம் மூலம் மிகப் பெரிய உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்தி தொழிற் சாலை 100 ஏக்கர் பரப்பில் 55,685 சதுர மீட்டரில் அமைக் கப்பட்டது. இதில், திரவ பென்டாவ லண்ட் தடுப்பூசி (எல்பிவி), தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, (எல்பிவிக்கு 40 எம்.டி.எஸ் மோனோ வெலண்ட் 100 எம்.டி.எஸ்), ஹீமோபிலஸ் இன்ஃப்ளூ யன்ஸா வகை பி. ரேபிஸ் தடுப்பூசி, ஜப் பானிய என்செபாலிடிஸ் மின் தடுப்பூசி, பி.சி.ஜி தடுப்பூசி உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்க அனைத்து வகையிலும் தயார் செய்யப்பட்டது.
வேலையிழப்பு...
இந்த நிறுவனம் நிதி பற்றாக்குறை யுடன் செயல்பட முடியாது என்று கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திடீர் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இந்நிறுவனத்தில் பணியுற்றும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.மேலும் பல ஊழியர்கள் வேறு இடங்களுக்குக் கட்டாயமாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.
டி.கே.ரங்கராஜன் எம்பி முன்முயற்சி
இந்நிலையில், கடந்த மாதம் இந்த நிறுவனத்தை ஆய்வு செய்து ஊழி யர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் டி.கே.ரங்கரா ஜன், பின்னர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது இந்நிறுவ னத்தை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக செயல்படுத்து போதிய நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கைகொடுத்த இடது முன்னணி அரசு
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக கை கழுவும் கிருமி நாசினியான சானிடைர் திரவத்தை இந்த நிறுவனத்தில் தாயரிக்க கேரள இடது முன்னணி அரசாங்கம் முன்வந்து அதற்கான பணி உத்தரவை வழங்க இருக்கிறது. தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாய் மாறிய இந்த சூழ்நிலையில் கேரள அரசு பணி உத்த ரவு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி யேற்றி இருக்கிறது. தடுப்பூசி நிர்வாகம் பணிகளை வேகவேகமாக செய்து வருகிறது.
இந்நிலையில் கொரானா வைரஸ் உள்ளிட்டவைகளுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கவும் அற்கான ஆராய்ச்சிகள் செய்ய இந்நிறுவனத்தை தொடர்ந்து பொதுத் துறை நிறுவனமாக இயக்க மத்திய உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், சிஐ டியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக் குமார் ஆகியோர் மத்திய-மாநில அரசு களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.