tamilnadu

கடைமடைப் பாசனப் பகுதிக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்க! சிபிஎம் வலியுறுத்தல்

 தஞ்சாவூர், மே 31- கடைமடைப் பகுதிகளுக்கு, பாசனத் திற்கு தண்ணீர் வருவதை அரசு உறு திப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சா வூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றி யச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஜூன் 12 ஆம் தேதி அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.  பாசனதாரர்கள் சங்கம் மூலம் நடை பெற உள்ள பணிகளை ஆற்றில் தண்ணீர் வருவதற்குள், போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ஆளுங்கட்சி தலையீடு இல்லாமல், நேர்மையான முறையில், முறைகேடின்றி பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சி யர், மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர் ஆகியோர் உறுதிப் படுத்த வேண்டும்.

 கடைமடைப் பகுதி பாசன வாய்க்கால் கள், ஏரிகள், குளங்களில் கஜா புயலின் போது சாய்ந்த மரங்கள் சில இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை உட னடியாக அகற்ற வேண்டும். கல்லணை யில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதியை சென்றடைவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்துவதோடு, கரைகளை பலப்படுத்தி, துருசுகள், ஷட் டர்கள் ஆகியவற்றை சரி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடப் பட்ட போது, கரை உடைப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடைமடைப் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களில் ஆக்கி ரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க் கால்களைத் தூர்வாரி பாசனத்திற்காக தண்ணீர் நிரப்பித் தர வேண்டும்”. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

;