தஞ்சாவூர், ஜூலை 13- காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு விவ சாய மின் இணைப்புக்காக 4,867 எண்ணிக்கை யில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கத்தின் இயக்குநனர் ஹெலன் தெரி வித்துள்ளனர். விவசாயப் பணிகளுக்காக இலவச மின் இணைப்புகள் கேட்டு, தமிழகத்தில் பல்லாயி ரக்கணக்கான விவசாயிகள், பல ஆண்டு களாக பதிவு செய்து காத்துள்ளனர். இந்நி லையில் கடந்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொ டரில், நடப்பாண்டு ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்தார். இதுகுறித்து மேல் நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் விவசாய மின் இணைப்புகளை துரிதமாக வழங்க வேண்டும் எனக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், கடந்த ஜூலை 1 அன்று 50,000 மின் இணைப்புகளை தமிழகம் முழுவதும் வழங்குவதற்கான ஆணையை வெளியிட்டது. அதன்படி, திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பலூர் மாவட்டத்துக்கு 1,527, திருச்சிக்கு 602, கரூருக்கு 373, புதுக்கோ ட்டைக்கு 1,106, தஞ்சாவூருக்கு 950, திருவா ரூருக்கு 256, நாகைக்கு 53 என மொத்தம் 4867 மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதில் 25,000 இணைப்புகள் தட்கல் திட்டத்திலும், 20,000 இணைப்புகள் பதிவு மூப்பு மற்றும் சுயநிதி திட்டத்தின் கீழும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 31.3. 2003 வரை பதிவு செய்துள்ள விவசாயிக ளுக்கு, பதிவு மூப்பு அடிப்படையிலும், தட்கல் திட்டத்திலும், சுயவிருப்பு நிதி திட்டத்தின் கீழ் மின் இணைப்புகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான பணிகளில் அதிகாரி கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
முறைகேடின்றி பதிவு மூப்பு அடிப்படை யில் தகுதியான அனைத்து விவசாயிக ளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.