tamilnadu

பட்டுக்கோட்டையில் சிறை நிரப்பும் போராட்டம்

தஞ்சாவூர் மார்ச்.18- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், என்பிஆர் சட்டத்திற்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  இப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அப்துல் ஜபார் கண்டன உரையாற்றினார். நிறை வாக மாவட்டப் பொருளாளர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.  ஆர்ப்பாட்டத்தில் 3000 சிறுவர், சிறுமியர், பெண்கள் உட்பட 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழு வதும் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில், கலந்து கொண்டவர்கள் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு, மதப் பாகுபாட்டை பிரதிபலிக்கும் மத்திய அரசின் கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.  மேலும், குடியுரிமை பறிக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களில், சிறையில் அடைக்கப்படுவது போல, குழந்தை கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.  கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்த தால் அவர்களை கைது செய்ய முடியா மல், திணறிய காவல்துறையினர், தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் கொரோனாவை காரணம் காட்டி, சமா தானம் செய்து அனுப்பி வைத்தனர். சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடத்திய பொதுமக்கள் ஜமாஅத் நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று கலைந்து சென்றனர்.