தஞ்சாவூர், அக்.17- பொதுமக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக குடியிருப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 30 ஆவது வார்டு பண்ணை வயல் சாலை சிவக்கொல்லை பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்த இடம் மன்னர் ஆட்சிக் காலத்திலி ருந்து தங்களுக்கு சொந்தமானது என தனியார் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர், அதற்கான நீதிமன்ற உத்தரவு இருக்கிறது என்று கூறி குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடு பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி பொதுமக்கள் கடந்த திங்களன்று பட்டுக் கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவை மீறி தம்மால் எதுவும் செய்ய முடியாது என கோட்டாட்சியர் கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை அன்று சிவக்கொல்லை பகுதியில் உள்ள பிரச்ச னைக்குரிய இடங்களை அளவீடு செய்வ தற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். நீதிமன்றத்தில் இருந்து அமீனா மற்றும் பாதுகாப்புக்காக காவல்துறையிரும் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பெண்களை, சிலர் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, அதனைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்றும் பணியைக் கைவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும், முன்னாள் நகரமன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் மார்க்ஸ், நகரச்செயலாளர் சுதாகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஏ.கோவிந்தசாமி, மெரினா ஆறுமுகம், சுந்தரபாண்டியன், கே.செந்தில், எம்.ஆர்.செந்தில் உள்ளிட்டோர் குடி யிருப்புவாசிகளை சந்தித்து பிரச்சினை குறித்து கேட்டறிந்தனர்.