தஞ்சாவூர், ஜூலை 2- கொரோனா அச்சத்தின் பிடியில் பொது மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், பேராவூ ரணி அரசு மருத்துவமனையில், போதிய மரு த்துவர்கள் இன்றி பற்றாக்குறையுடன் செய ல்பட்டு வருவது பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தரமான சிகிச்சை அளிக்க போதிய மருத்து வர்களை நியமிக்க, உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு காமராசர் மருத்துவமனை, சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து இங்கு சிகிச்சை பெறுகின்றனர். இம்மருத்துவமனையில், நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில் இங்கு 12-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது தலைமை மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே பணியாற்றி வருவ தாக கூறப்படுகிறது.
இங்குள்ள 7 மருத்துவர்கள் கொரோனா சிறப்பு பணிக்காக சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஒரு சித்த மருத்துவர், தலைமை மருத்துவர் தவிர்த்து, மூன்று மருத்துவர்கள் இரவு-பகல் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஓய்வி ன்றி பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கரு ப்பையா கூறுகையில், “கொரோனா நோ ய்த்தொற்று காரணமாக, காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய்களுக்கு தனியார் மரு த்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். கொரோனா பொது முடக்கத்தால், அனைவரும் வேலை இழந்து தவிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற நூற்றுக் கணக்கானோர் தினசரி அரசு மருத்துவம னையை நாடும் நிலை உள்ளது. இரண்டு மருத்துவர்கள் புறநோயாளி களையும் கவனித்துக் கொண்டு, உள்நோ யாளிகள், பிரசவத்திற்காக அனுமதிக்கப்ப ட்டுள்ள கர்ப்பிணிகளையும் கவனிக்க வேண்டி உள்ளது. இதனால் நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. கூடும் நோயாளிகள் கூட்ட த்தால் கொரோனாத் தொற்று பரவும் அபா யம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போதிய மருத்துவர்களை நியமிக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.