tamilnadu

img

தஞ்சை அருகே நெகிழ்ச்சி நிகழ்வு விபத்தில் சிக்கிய மாணவிக்கு உதவிய ஆசிரியர்கள்

தஞ்சாவூர், ஜூலை 20- பேராவூரணி அருகே விபத்தில் சிக்கிய அரசுப் பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் தாங்களாகவே முன்வந்து நிதி வசூலித்து வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகு மான், எலக்ட்ரீசியன். இவரது மகள் அப்ரா பாத்திமா(8), இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண் டிருந்த போது, விபத்தில் சிக்கி படுகாய மடைந்தார். ஏழ்மை நிலையில் இருந்த மாணவியின் மருத்துவ சிகிச்சைக்காக பல்வேறு தரப்பினரும் உதவி செய்த நிலையில் தற்போது சிகிச்சை முடிவ டைந்த மாணவி வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உதவ சேது பாவாசத்திரம் வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர்களி டம் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 600 நிதி வசூலிக்கப்பட்டது. இதை பட்டுக் கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யில் மாணவியின் பெயரில் கணக்கு தொடங்கி நிரந்தர வைப்புத் தொகை யாக செலுத்தப்பட்டது. மாணவியின் உயர் கல்விக்காக கல்லூரி செல்லும் போது, வரும் 2029-ஆம் ஆண்டில் முதிர்வு தொகையாக ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 282 கிடைக்கும் வகையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று இதற்கான(பாண்ட்) பத்தி ரத்தை வட்டாரக் கல்வி அலுவலர்கள் எம்.கே.ராமமூர்த்தி, சகுந்தலா ஆகி யோர் முன்னிலையில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் செ.முத்த ரசன், மாவட்ட பொருளாளர் செ.பால முருகன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் ஏ.வி.சந்தி ரசேகர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டாரச் செயலாளர் சுவாமி நாதன், மாவட்ட துணைச் செயலாளர் ஜோசப் சந்திரன் ஆகியோர் மாணவி யின் பெற்றோரிடம் வழங்கினர்.  இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகை யில், “மாணவியின் தந்தை வறுமை நிலையில் உள்ளது அறிந்து, மாண விக்கு உதவ வேண்டும் என முடி வெடுத்தோம். இதில் சேதுபாவா சத்திரம் வட்டார ஆசிரியர்களும் மகிழ்ச்சியோடு உதவ முன்வந்தனர். இதில் வசூலிக்கப்பட்ட தொகை வங்கி யில் நிரந்தர வைப்புத் தொகையாக போடப்பட்டது. மாணவி கல்லூரி செல்லும் காலத்தில் உதவும் வகையில் இவ்வாறு திட்டமிடப்பட்டது’ என்ற னர். ஆசிரியர்- மாணவர்கள் உறவு என்பது அனைத்தையும் விட மேலா னது என இந்நிகழ்வு உறுதிப்படுத்தி உள்ளது.