tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

தஞ்சாவூர், மார்ச் 8- தீக்கதிர் செய்தி எதிரொலியாக, கட்டப் பட்டு 6 மாதங்களாகியும், திறக்கப்படாமல் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறக்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் பாதிரங்கோட்டை வடக்கு ஊராட்சி கா.உஞ்சியவிடுதி கீழத் தெரு குடியிருப்பு பகுதியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 2018-19 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.19.55 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் வசதியுடன் அமைக் கப்பட்டது.  இப்பணி முடிந்து 6 மாதங்களைக் கடந்த நிலையில் மின் இணைப்பு வழங்கப் படாததால் குடிநீர் வழங்க முடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி மிகவும் அவதிப்பட்டனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மின் வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  இதைதொடர்ந்து கடந்த 4-ஆம் தேதி இதுகுறித்து தீக்கதிரில் விரிவான செய்தி படத்துடன் வெளியானது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ம. கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதில் சனிக் கிழமை ஊராட்சி தலைவர் அபூர்வா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சி யில் எழுத்தாளர் துரை.குணா, ஆசிரியர் மணிசேகரன், முன்னாள் ஊராட்சி உறுப்பி னர் மு.ரெங்கசாமி கலந்து கொண்டனர். மேலும் நீர்த்தேக்கத் தொட்டியின் குழாய் இணைப்புகளில் தண்ணீர் கசிவு உள்ளது. ஜெனரேட்டர் அறைக்கு மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.