கும்பகோணம், பிப்.2- தஞ்சை வடக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கை யெழுத்து இயக்கம் கும்ப கோணம் அறிஞர் அண்ணா நக ராட்சி காய்கறி வணிக வளாகத் தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் அன்பழகன் கோவி செழியன் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் லோகநாதன் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான் நகர செயலாளர் சுப தமிழழகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெயபால், நகர செய லாளர் செந்தில்குமார், நகர குழு உறுப்பினர் செல்வம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலா ளர் தமிழருவி ஆகியோர் முன் னிலை வகித்தனர். கையெழுத்து இயக்கத்தை திராவிட கழக தலைவர் கி. வீர மணி முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் வடிவமான பாஜக திட்டமிட்டு நாட்டை பிளவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசியல் சாசனத்திற்கு எதிரான தாகும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வரு வதை தனி மனிதர்கள் புகுந்து போராடுபவர்களை துப்பாக்கி ஏந்தி சுடும் அளவிற்கு தில்லியில் சட்டம் ஒழுங்கு உள்ளது. தேசபக்தி என்ற பெயரால் குடி யுரிமை சட்டத்திற்கு எதிராக உள்ளவர்களை சுட்டுத் தள்ளுங் கள் என்று பாசிச ஆட்சிகளில் கூட நடக்காத ஒன்றை பாஜக அரசு செய்து வருகிறது. தமிழக மண் ணில் பகுத்தறிவு மற்றும் பெரியார் மண்ணில் அனைத்து மக்களை யும் பக்குவப்படுத்தி உள்ளது. குடியுரிமைச் சட்டத்தை உலக நாடுகள் கண்டிக்க தொடங்கி யுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய யூனியன் குடியுரிமை சட்டத் துக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றியுள்ளன. ஜனநாயகத்தில் வாக்கு அளித்தவருக்கும், வாக்க ளிக்காத குடிமக்களுக்கும் பிரத மர் என்பதை மோடி உணர வேண் டும். திமுக தலைவர் முக. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடத்தினோம். பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடத்தினோம் அவர்கள் மீது எல்லாம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்போம் விரட்டு வோம். நாடு முழுவதும் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்று குடி யரசுத் தலைவரிடம் திமுக எம்பிக்கள் அளிப்பார்கள். ஜனநாயகத்தையும், மதச்சார் பின்மையும், சமூக நீதியையும் காப்பாற்றப்பட வேண்டும். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்ட மசோதா போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் கடுமை யான விலையை தேர்தல் காலத் தில் பாஜக சந்திக்கும். எல்லா வற்றுக்கும் ஒரு முடிவு உண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதா திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் ஓயாது ஓயாது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மதிமுக மாநில விவசாய அணி செயலாளர் முரு கன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது செல்லப்பா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.