tamilnadu

தஞ்சாவூர், திருவாரூர் முக்கிய செய்திகள்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்  இதுவரை 98,968 பேர் பயன் தஞ்சை ஆட்சியர் தகவல்
தஞ்சாவூர், செப்.24-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்துடன் முதலமைச்ச ரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இணைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 பயனாளிகளுக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னர் ஆட்சியர் கூறும்போது, மத்திய அரசு நாடு முழு வதும் 15.9.2019 முதல் 02.10.2019 வரை 15 நாட்கள் கொண்டாடு வதற்கு முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் மூலம் 15.9.2019 முதல் 2.10.2019 வரை சிறப்பு மருத்துவ முகாம், தொற்றா நோய் முகாம், நடைபயணம், குறு வானொலி விளம்பரம், தொலைக்காட்சி செய்தி, கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி சுவர் ஓவியம், வினாடி வினா நிகழ்ச்சி, மணற் சிற்பம் ஆகிய பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அக்டோபர் 2-ல் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் இத்திட்டம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 98,968 (தொண்ணூற்று எட்டா யிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு) பயனாளிகள் ரூ.178.23 கோடி (நூற்று எழுபத்து எட்டு கோடியே இருபத்து மூன்று லட்சம்) மதிப்பில் பயனடைந்துள்ளனர்” என்றார்.  இந்நிகழ்வில், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மரு.குமுதா லிங்கராஜ், இணை இயக்குநர் (சுகா தாரம்) மரு.காந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட திட்ட அலுவலர் சுவாமிநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் த.ராஜா செய்தி ருந்தார்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் வேலை வாய்ப்பு 
தஞ்சாவூர், செப்.24-தஞ்சாவூர் மாவட்டத்தில், செயல்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் இரண்டு தொழில்நுட்ப உதவியாளர்கள் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணி தேர்வு முகமை மூலம் நிரப்பிட அறிவுறுத்தப் பட்டுள்ளது.  எனவே தொழில்நுட்ப ஆலோசகராக தேர்ந்தெடுக்கப் படும் பணியாளருக்கு ரூபாய் 45 ஆயிரம் மற்றும் தொழில்நுட்ப உதவியாளராக தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ 30 ஆயிரம் வழங்கப்படும். தொழில்நுட்ப ஆலோசகர் பணியிடத்துக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர் எம்.எஸ்.சி(விலங்கியல்), பட்டத்துடன், 10 ஆண்டு கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தொழில் நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு பிஎஸ்சி(விலங்கியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கும் திறன் மற்றும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.  எனவே, இப்பணியினை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பதிவு துறைகளின் மூலம் பதிவு செய்து, செயல்பட்டு வரும் பணி நியமன முகமைகள் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள், அனு பவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்க சேவை கட்ட ணம் ஆகியவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு செப்.27 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  தெரிவு செய்யப்படும் முகமையினர் உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். விண்ணப் பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி. வேளாண்மை இணை இயக்குனர், காட்டுத் தோட்டம், மாரியம்மன் கோயில் (அஞ்சல்), தஞ்சாவூர்-613 501 தொலைபேசி எண் 04362 267679. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி 
திருவாரூர், செப்.24-ஊட்டச்சத்து மாதத்தையொட்டி(போஷான் அபியான்) திருவாரூர் புதிய இரயில் நிலையத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தொடங்கி வைத் தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் இம்மாதம் முழு வதும் தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரும்பு சத்துள்ள உணவுகள், சத்தான உணவைத் தொடர்ச்சி யாக சாப்பிட்டு வருவது, நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். நல்ல ஊட்டச்சத்து உணவைக் கொடுப்பதால் குழந்தை களிடம் உடல் வளர்ச்சி குறைபாடு, குள்ளமாதல் பிரச்சனை மற் றும் எடை குறைவு பிரச்சனை வராமல் தடுக்கலாம். மேலும் உணவு உண்பதற்கு முன்பும், கழிப்பறை பயன்படுத்திய பின்ன ரும் நன்றாக கைக் கழுவுதல், அனைவரும் கழிப்பறைப் பயன்படுத்துவதை உறுதி செய்தல். பாதுகாப்பான குடிநீர் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்தார். இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியானது புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலை யம்,தெற்கு வீதி வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் திட்ட அலுவலர் ராஜம், வட்டாட்சியர் நக்கீரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் வட்டார அலுவலர் புவனேஷ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.