tamilnadu

img

திருவள்ளுவர் சிலை மீது சாணி வீசப்பட்டதால் பதற்றம்

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சாணி வீசியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. 
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பட்டிக்கு அருகே வல்லம் பகுதியில் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சாணி வீசி விட்டு சென்றுள்ளனர்.  இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து வல்லம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

;