தஞ்சாவூர், மே 14- தஞ்சாவூர் மாவட்டத்தில் நமது பள்ளி, நமது குழந்தை கள், நமது குடும்பம் என்கிற திட்டம் ஒன்று கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு, அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரி யர்கள் தங்களின் சொந்த நிதியின் மூலமாக, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, அவர்கள் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். இதன்படி, கடந்த மே 5, 11-ல் மாவட்டத்தில் உள்ள 136 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 133 தலைமையாசிரியர்கள், 409 ஆசிரியர்கள், 28 அலுவலகப் பணி யாளர்கள் இணைந்து 4950 மாணவர்களின் குடும்பத்திற்கு 25.54 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை யும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 95 பள்ளிகளில் பணியாற்றும் 95 தலைமையாசிரியர்கள், 1562 ஆசிரியர்கள் மற்றும் 166 அலுவலகப் பணியாளர்கள் இணைந்து 6287 மாணவர்களின் குடும்பத்திற்கு 30.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் மொத்தம் ரூ. 55.75 லட்சம் மதிப்பில், 11,237 மாணவர்களின் குடும்பங்க ளுக்கு வழங்கினர்.