tamilnadu

img

தஞ்சாவூரில் ஆசிரியர் கத்தியால் குத்தி கொலை!

தஞ்சாவூர்,நவம்பர்.20- தஞ்சாவூரில் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை திடீரென உள்ளே நுழைந்த மதன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்
சிறிது நேரத்திலேயே குற்றவாளி மதனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்க உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.