தஞ்சாவூர் டிச.4- தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் கலை ஆயம் மற்றும் இந்திய தேசிய கலைப் பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் இளந்தளிர் 2019 விருது வழங்கும் விழா தஞ்சையில் நடை பெற்றது. விழாவிற்கு தென்னகப் பண்பாட்டு மைய நண்பர்கள் குழுத் தலைவர் டாக்டர் வி.வரதராஜன் தலைமை வகித்தார். விரு துகளை தென்னகப் பண்பாட்டு மைய பேரா சிரியர் என்.பாலசுப்ரமணியன் வழங்கி வாழ்த்திப் பேசினார். கலை பண்பாட்டுத் துறையின் முன்னாள் இணை இயக்குனர் முனைவர் ஆர். குணசேகரன், சுற்றுலா ஆலோசகர் ஆர்.ராஜசேகரன், கலை ஆயத் தின் அறங்காவலர் என்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக கலை ஆயத்தின் கௌரவ செயலாளர் எஸ்.முத்துக்குமார் நன்றி கூறினார். இப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 64 பேருக்கு விருது கள் வழங்கப்பட்டன. தஞ்சை மார்னிங் ஸ்டார்மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் முதுநிலை நாடகக் குழு விற்கான விருது பெற்றது. விருது பெற்ற பள்ளி மாணவர்களை பள்ளித் தாளாளர் அறி வானந்தம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டி வாழ்த்து தெரி வித்தனர்.