tamilnadu

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு...

வரலாற்று காலந்தொட்டு தமிழின் மேன்மையை புறந்தள்ளி சமஸ்கிருதம் மட்டுமே தேவபாஷை என்ற மேலாதிக்கம் நீடித்து வரும் நிலையினை மாற்றிட வேண்டும்.  உலகின் மூத்த மொழியான தமிழுக்கு உரிய முன்னுரிமை அளிக்கவும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திடவும் தமிழில் குடமுழுக்கு நடத்துவது அவசியமாகும். கடந்த காலத்தில் தமி ழகத்தில் பல்வேறு கோவில்களில் குட முழுக்கு விழா தமிழில் நடத்தப்பட்டுள்ளது. எனவே, பிரகதீஸ்வரர் ஆலயத்திலும் இந்த நடைமுறை தொடங்கப்பட வேண்டும்.

மேலும், மரபு, பண்டைய பழக்க வழக்கம் என்ற பெயரில் காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளைப் பின்பற்றுவது ஏற்க இயலாது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டுமென சட்டங்கள் இயற்றப்பட்டு நீதிமன்றங்களும் இசைவுதெரிவித்துள்ள நிலையிலும், கேரள இடதுஜனநாயக அரசு அதை நடத்திக் காட்டி யுள்ள பின்னணியிலும் கூட, தமிழகத்தில் இச்சட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் களாக நியமிக்க வேண்டிய நிலையில், அதற்கு முதல்படியாக தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

;