சிலை திருட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருவர் ஆஜர்
கும்பகோணம், செப்.3- அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் சிவன் கோவில், சுத்தமல்லி பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிலைகள் திருட்டு வழக்கு தொடர்பாக சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் செவ்வாயன்று கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி, வரும் அக்டோபர் 7-ம் தேதி ஆஜராக உத்தர விட்டார். மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் தனக்கு மீண்டும் இத்துறையில் பணி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக கும்ப கோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜ ரானார். இந்த வழக்கில் ஆஜரான சிலை திருட்டு தடுப்பு சிறப்பு அலுவலர் பொன்மாணிக்கவேல், திருமகளுக்கு மீண்டும் பணி வழங்க கூடாது என வாதாடினார்.
குடந்தை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
கும்பகோணம், செப்.3- மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும் பத்திற்கும் தவணை முறையில் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதையும், பிறப்பு, இறப்பு சான்றி தழில் திருத்தம் கோரி இனி வருவாய்த் துறையை மட்டுமே அணுக வேண்டும் என்ற சட்டத்தையும் எதிர்த்து கும்ப கோணத்தில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்க ணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை பிறப்பு- இறப்பு சான்றிதழில் திருத்தம் கோரி நீதிமன்றத்தை மட்டுமே அணுகி பெற வேண்டும் என்ற நடை முறை தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.