tamilnadu

img

பேச்சுப் போட்டி: மாணவிக்கு பாராட்டு 

தஞ்சாவூர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தஞ்சை மாவட்டக் குழு மற்றும் புதுச்சேரி முப்பெரும் கவி ஞர்கள் அறக்கட்டளை சார்பில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை யில், மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.  16 கல்லூரிகளைச் சேர்ந்த 27 மாண வர்கள் கலந்து கொண்ட இப்போட்டி யில், பேராவூரணி அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி மாணவி கோகிலா, (பி.ஏ., மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்) இரண்டாம் பரிசாக ரூபாய் 3000 மற்றும் சான்றிதழ்களைப் பெற்றார். பரிசு பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவியைக் கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனரா ஜன் பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்தினார். ஆங்கிலத் துறைத் தலைவர் இரா.ராஜ்மோகன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

;