tamilnadu

உழவர் கடன் அட்டைக்கான விண்ணப்பம் பெற பிப்.29 வரை சிறப்பு முகாம்

தஞ்சாவூர், பிப்.22- கௌரவ நிதி பெற்று வரும் விவ சாயிகள் அனைவரும் உழவர் கடன்  அட்டை பெறுவதற்கான விண்ண ப்பம் பெறும் சிறப்பு முகாம் பேராவூ ரணி வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பிப்.22 முதல் 29 வரை நடைபெற உள்ளது என பேரா வூரணி வட்டார வேளாண்மை உதவி  இயக்குநர் எஸ்.மாலதி தெரிவித்து ள்ளார்.  இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது:  “பேராவூரணி வட்டாரத்தி ற்குட்பட்ட 61 கிராமங்களில் இதுவரை  9,711 விவசாயிகளும், சேதுபாவா சத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட 77  கிராமங்களில் 10,595 விவசாயிகளும், பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தில் வருடத்திற்கு ரூ.6,000 நிதியுதவி பெற்று பயனடைந்து வரு கிறார்கள்.  இவர்களில் ஏற்கனவே தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன்  வங்கிகள் அல்லது தேசியம யமாக்கப்பட்ட வங்கிகளிலோ கடன் உதவி பெற்று உழவர் கடன் அட்டை  பெற்றுள்ள விவசாயிகளும் இது வரை உழவர் கடன் அட்டை பெறாத  விவசாயிகளும் உழவர் கடன் அட்டை யினை புதுப்பித்துக் கொள்ளவும் மற்றும் புதிதாக பெற்றுக் கொள்ள வும் அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.  முகாம், நடைபெறும் நாளில் விவ சாயிகள் கலந்து கொண்டு அதற்கான  விண்ணப்பத்தினை பெற்று  பூர்த்தி செய்து வழங்க வேண்டும். உழவர் கடன் அட்டை பெறுவதற்கு விவசா யிகள் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 29. மேற்படி உழவர் கடன் அட்டை பெறுவதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருளை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். உழவர் கடன்  அட்டை வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க ப்படுகிறது.  விவசாயிகள் தங்கள் நில  உடமையில் அடிப்படையில் பிணை யில்லா கடனாக ரூ.1,60,000 வரை பெறலாம். உரிய காலத்தில் கடனை  திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச 4 சத வட்டி  மட்டுமே வசூலிக்கப்படுகிறது.   மேலும் 3 சத வட்டி தொகை ஊக்கத் தொகையாக விவசாயி களின் வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தப்படுகிறது. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி வாங்க நிதி உதவி வழங்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் உழவர் கடன் அட்டை பெறலாம். விண்ணப்பத்துடன் கணினி சிட்டா, ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 எண்கள் ஆகிய ஆவணங்களை இணைத்து  தங்களது அலைபேசி எண்ணையும் மறவா மல் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். விவசாயிகள் அதிக வட்டிக்கு தனி யாரிடம் கடன் பெற்று மீள கடனை அடைக்க முடியாத சூழ்நிலையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதை தவிர்த்திடும் வகையில் ஏற்கெனவே  நடைமுறையில் உள்ள உழவர் கடன் அட்டை என்ற இத்திட்டத்தில் அனைத்து கௌரவ நிதி உதவி பெற்று வரும் விவசாயிகளும், இணைந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறப்பு முகாம் நடைபெறும் நாள், கிராமம் தொடர்பான விவரங்கள் தொடர்பான துண்டுப் பிரசுரம் அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் விளம்ப ரப்படுத்தப்படும்.”  இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.