tamilnadu

img

செருவாவிடுதியில் தேசிய வங்கி அமைக்க பாடுபடுவேன் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வாக்குறுதி

தஞ்சாவூர், ஏப்.14-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுகவேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா துறவிக்காடு, திருச்சிற்றம் பலம், செருவாவிடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் அவர் பேசுகையில், தென்னை விவசாயம் மீண்டும் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வு மலரவும், தென்னை மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள்,ஓட்டு வீடுகள் சீரமைக்கப்படும். அவசர அவசரமாக முதலமைச்சர் வருகிறார் என்பதற் காக முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டன. ஆனால் இப்பகுதி உள்கிராமங்களில் சாலைகள் படுமோசமாக உள்ளது. அவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செருவாவிடுதி பகுதியில் மக்களின் விருப்பத்தை ஏற்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை திறக்கப் படும் என எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உறுதிஅளித்தார். பரப்புரைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மனித நேய ஜனநாயக கட்சி, மனித நேயமக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 


சிஐடியு வாக்கு சேகரிப்பு

அரசு போக்குவரத்துக் கழக மண்டலதுணை பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், கிளைச் செயலாளர் மாரியப்பன், சாக்ரடீஸ், அரசு போக்குவரத்து ஊழியர் ஓய்வூதியர் சங்க தலைவர் ஏகாம்பரம் மற்றும் சிஐடியு இணைப்பு சங்க பொறுப்பாளர்கள் ஜி.ரெகுபதி, டி.ஜெகதீசன் மற்றும் சிஐடியு உறுப்பினர்கள் மற்றும் 13 ஆவது வார்டுமதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அஷ்ரப், ஹஜ் மைதீன், காளிதாஸ், பாஸ்கர்உள்ளிட்டோர் தஞ்சை நாடாளுமன்ற வேட் பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக மன்னார்குடி நகர் பகுதியில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

;