கும்பகோணம் ஆக.27- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் கொத்தங்குடி கிராமத்தில் குளக்கரை அருகில் உள்ள மின்மாற்றி கடந்த ஒரு மாத காலமாக இயங்காமல் இருந்தது. இது சம்பந்தமாக விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சி.நாகராஜன் தலைமையில் விவசாயி சங்கம் மற்றும் மின் மோட்டார் விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மின்சார துறையினர் டிரான்ஸ்பார்மர் பழுதை நீக்கி சரி செய்தனர்.