அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக விவசாயிகளை ஒடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு மின்சார, வேளாண் அவசர சட்டங்களை மத்திய அரசாங்கமே திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை தஞ்சையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் துவங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.