tamilnadu

img

மீண்டும் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார் மூத்த தோழர் ஏ.காளிதாஸ்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மூத்த தோழர் ஏ.காளிதாஸ், மீண்டும் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்கெனவே இணைத்துக் கொண்டார். கட்சியின் வட்டாரச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர், இடையில் சிறிது காலம் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் சிவப்பு துண்டு அணிவித்து வரவேற்றார். பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெ.ஜீவகுமார், பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், சிவசாமி, முருகேசன், ஸ்ரீதர் உள்பட பலர் உடனிருந்தனர்.