தஞ்சாவூர், செப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோகூர்(கல்லணை) கிளைக் கூட்டம், கிளைச் செயலாளர் எம்.அகிலா தலைமை யில் நடைபெற்றது. பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலா ளர் கே.காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.சம்சுதீன், எம்.பாஸ்கரன், சி.சிவசாமி, பி.முருகேசன், ஏ.சந்திரா, எம்.ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தோகூரிலிருந்து, வேங்கூர் வரை சாலையின் இருபுற மும் மரண குழியாக உள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். கோவிலடியில் திருட்டுத்தனமாக 100 க்கும் மேற்பட்ட லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் கடத்து வதை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாயிகளுக்கு உட னடியாக விவசாயக்கடன் மற்றும் உரம், பூச்சி மருந்து களை வழங்க வேண்டும். கல்லணை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனை சரி செய்யத் தவறினால், அக்டோ பர் 1 ஆம் தேதி பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.