tamilnadu

img

தனியார் மதுபான நிறுவனங்களில் ரூ.1,120 கோடி பறிமுதல்

சென்னை,ஆக.13-  தனியார் மதுபான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1120 கோடி பறி முதல் செய்யப்பட்டது. எஸ்.என்.ஜே. குழுமம் என்ற தனி யார் மதுபான நிறுவனத்துக்கு சொந்த மான 55 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்ட னர். இதில் ரூ. 4.80 கோடி பணம் காரில் இருந்து பறிமுதல் செய்யப் பட்டது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது பானங்கள் சப்ளை செய்யும் இரண்டு தனியார் நிறுவனங்கள் மதுபான தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் வாங்கியதில் தவறாக கணக்கு காட்டி கோடிக்கணக்கான ரூபாயை கருப்பு பணமாக மாற்றி யுள்ளதாகவும் வருமானவரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. இரண்டு மதுபான நிறு வனங்களிலும் நடத்தப்பட்ட சோத னையில் ரூ.1,120 கோடி அளவிலான கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. இதில் ரூ.450 கோடி கணக்கில் காட்டாத வருவாயை வைத்திருந்ததாக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த இரண்டு மதுபான நிறுவனங் களுக்கு சொந்தமான 30 வங்கி  கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. தொட ர்ந்து இந்த இரண்டு மதுபான நிறு வனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.