tamilnadu

img

ஒரத்தநாடு அருகே சாலையை சீரமைத்த வாலிபர் சங்கத்தினர்

தஞ்சாவூர், ஆக.10- ஒரத்தநாடு அருகே சாலையில் உள்ள முட்புதர்களை அகற்றியும், மின்கம்பங்களில் வளர்ந்திருந்த காட்டுக் கொடிகளையும் வாலிபர் சங்கத்தினர் அகற்றி சுத்தப்படுத்தினர்.  தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு வாலிபர் சங்க கிளை சார்பாக, ஞாயிற்றுக்கிழமை உழைப்பு தானத்தின் மூலம் சாலையில் இருந்த முட்புதர்கள், மற்றும் மின் கம்பிகளின் மேல் படர்ந்திருந்த காட்டுக்கொடிகளை வெட்டி சுத்தம் செய்தனர். கிளைத் தலைவர் பா.சிலம்பரசன் தலைமையில் நடைபெற்ற, உழைப்பு தான நிகழ்ச்சியை, மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா தொடங்கி வைத்தார். கிளைப் பொருளாளர் ஆ.டார்வின், துணைத் தலைவர் இ.சுவேதன், துணைச் செயலாளர் ப.குழந்தைவேல் மற்றும் கிளைத் உறுப்பினர்கள் கிராமத்தை சுத்தப்படுத்தினர்.