tamilnadu

குறுவை நெல் பயிர்க் காப்பீடு திட்டம் 

 தஞ்சாவூர், ஜூன் 13- குறுவை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டம் 2019-20 ஆண்டிற்கான பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்ட நிலை யில் நெல் பயிருக்கு ஒரு ஏக்கர் பிரிமியம் தொகை ரூ.620 செலுத்த வேண்டும். பதிவு செய்திட செல்லும்போது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக ஒளிநகல், கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்ற சிட்டா அடங்கல், புகைப்படம், விண்ணப்பம் மற்றும் முன்மொழி படிவம் ஆகிய ஆவணங்க ளுடன் செல்ல வேண்டும். திட்டத்தில் சேர வேண்டிய கடைசி நாள் 31.07.2019 ஆகும். எனவே அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது வணிக வங்கிகள் அல்லது பொது சேவை மையங் கள் மூலம் பிரீமியம் செலுத்தி திட்டத்தின் பயன்களை முழ மையாக பெறலாம் என தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி தெரிவித்துள்ளார்.

;