தஞ்சாவூர், அக்.1- இந்தியன் வங்கியில் 36 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெறும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால் பணி ஓய்வு பாராட்டு விழா திங்கள்கிழமை அன்று பட்டுக்கோட்டை எம்.என்.வி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமுஎகச மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி தலைமை வகித்தார். மாநில கெளரவத் தலைவர் ச.தமிழ்ச்செல் வன், துணைத் தலைவர் நந்தலாலா, துணைப் பொதுச் செய லாளர்கள் புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், களப்பிரன், மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார், மாவட்டத் துணைத் தலைவர் பா.சத்தியநாதன், மாவட்டப் பொருளாளர் சர வணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆம்பல் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, பக்கிரிசாமி, பட்டுக்கோட்டை கிளைச் செயலாளர் மோரிஸ் அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, இந்தியன் வங்கி ஊழி யர் சங்க பள்ளி தாளாளர் சோமசுந்தரம், இந்தியாவிற்கான மக்கள் இயக்க பட்டுக்கோட்டை ஒருங்கிணைப்பாளர் திருஞானம், ராஜ்மோகன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் எஸ்.கே.பாலகிருஷ்ணன், கண. கல்யாணம், அண்ணாதுரை, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் வி.எஸ்.பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் ஞானசூரியன், சிவ.ரவி, பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.ஜவகர் பாபு மற்றும் தோழர் தனபால் குடும்பத்தினர் தோழமை தொழிற்சங்க இயக்கத்தினர் ஆகியோர் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்றனர். நிறைவாக தி.தன பால் ஏற்புரையாற்றினார். விழாவில், பட்டுக்கோட்டை கட்சி அலுவலக நிதியாக ரூ.25 ஆயிரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமியிடம், தி.தனபால் வழங்கினார்.