tamilnadu

img

கஜா புயலால் சேதமான பள்ளி சுற்றுச் சுவரை சீரமைக்க கோரிக்கை 

 தஞ்சாவூர், அக்.13- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கஜா புய லால் சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை களை சரி செய்து தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் சார்பில், மக்கள் சட்ட உரிமை கள் கழக சேதுபாவாசத்திரம் ஒன்றிய அமைப்பாளர் பன்னீர்செல்வம் தஞ்சை ஆட்சியருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சேதுபாவா சத்திரம் ஒன்றியம், மரக்காவலசை கொடிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறைகள் பாதிப்ப டைந்துள்ளது. இதனால் பள்ளி வளாகத்திற்குள் ஆடு, மாடு கள் புகுந்து மரக் கன்றுகளை சேதப்படுத்தி வருகிறது.  மேலும், சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் குடிகாரர்களின் புகழிடமாகவும் திகழ்கிறது. கழிப்பறைகள் சேதமடைந்து இருப்பதால் பள்ளி மாணவ, மாணவி யர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழலில், அரசு நடு நிலைப்பள்ளியின் நிலை இப்படி இருப்பது மன வேத னையாக உள்ளது. எனவே, தாங்கள் நேரில் இப்பள்ளி யை பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் சுற்றுச் சுவர் மற்றும் கழிப்பறைகளை புதுப்பித்து மாணவர்களின் துயரத்தை போக்க வேண்டும்” என அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.