தஞ்சாவூர், ஜூன் 3-தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் பேரவை, பாரம்பரிய விசைப்படகு மீனவர் சங்கம், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர் சங்கம், மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடுமீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் ஏ.தாஜூதீன் தலைமை வகித்தார். ஜமாஅத் தலைவர் அல்லாபிச்சை முன்னிலை வகித்தார். பள்ளிவாசல் இமாம்வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட நிர்வாகி பண்ணைவயல் ராஜாத்தம்பி, முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் வெங்கடாசலம், அதிமுக ஒன்றியச் செயலாளர் நாடியம் சிவ.மதிவாணன், முன்னாள் கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், பேராவூரணி வர்த்தக சங்கத்தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் இரா.ஜவஹர்பாபு, டாக்டர் சந்திரசேகரன், டாக்டர் பாபு, பாஜக ஒன்றியச் செயலாளர் குகன், கண்ணன், திமுக நிர்வாகிகள் பூவாளூர் ஞானப்பிரகாசம், சேக் அப்துல்லா, மாசாகாடு ரவிச்சந்திரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் என்.எஸ்.என்.நஜ்முதீன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல் சலாம், மீனவர் சங்க நிர்வாகிகள் வீரையன், சையது முகமது, அப்துல் ரகுமான், பெரியய்யா, கமால் பாட்சா, இபுறாகீம், முகமது ராபீக், மற்றும் காவல்துறை, மீன்வளத்துறை, கடலோரக் காவல்துறை, தீயணைப்புத் துறைஉள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.