tamilnadu

img

மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த  குடிநீர் விற்பனை நிலையம்

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறை சார்பில் அமைக்கப்பட்ட மலிவு விலை குடிநீர் விற்பனை நிலையம் கடந்த இரண்டு மாதமாக பூட்டி கிடந்தது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் ரூ 10 மதிப்பிலான விலை மலிவான குடிநீர் வாங்க முடியாமல் அதிக விலை கொடுத்து குடிதண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டது. எனவே மலிவு விலை குடிநீர் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதுகுறித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. இதன் எதிரொலியாக திங்கள்கிழமை மலிவு விலை குடிநீர் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த மலிவு விலை குடிநீர் நிலையம் திறந்திருப்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமல்லாமல், தொடர்ந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

;