தஞ்சாவூர் நவ.7- தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் புதன்கிழமை அன்று நடைபெற்ற இராசராச சோழனின் 1034 ஆவது ஆண்டு சதய விழா நிறைவு நிகழ்ச்சியில் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை இராசராசன் விருதுகளை வழங்கினார். விழாவினையொட்டி மன்னன் இராசராசன் விருதுகளை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், என்.செல்வராஜ் ஆகியோருக்கு ஆட்சியர் வழங்கினார். விழா நிறைவு நிகழ்ச்சியில் சதய விழாக் குழு தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.