தஞ்சாவூர், ஜூன்4- விவசாயிகளுக்கு நிபந்தனை இன்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தஞ்சை வந்திருந்த, தமிழக அரசின் வேளாண்மைத்துறை இயக்குநரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, “ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு விவ சாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள் ளது. தற்போது குறுவை சாகுபடிக்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இப்பணிகள் அனைத்தும் தண்ணீர் வருவதற்கு முன்பாக முடிக்கப்பட வேண்டும். பணிகள் திட்ட மதிப்பீட்டின்படி முழுமையாக நடை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
திட்ட மதிப்பீடு விளம்பரப் பலகை வைக்கப்பட வேண்டும். விவசாயிகளைக் கொண்ட கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் கிரா மத்தில் உள்ள விவசாயிகளுக்கு, குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்து உழவு, விதை மானியங்கள், நுண்ணுயிர் உரங்கள் உள்ளிட்டவை கிடைத்திட உதவ வேண்டும். குறுகிய கால நெல் விதைகள் வேளாண் துறை மூலம் டெப்போக்களில் வழங்க வேண்டும். உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போ தைய விவசாய பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிபந்தனையின்றி பயிர்க் கடன் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். மேலும் தமிழகத்திற்கு கர்நா டகத்திலிருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை உரிய காலத்தில் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடைமடை வரை முழுமையாக தண்ணீர் சென்று சேர உரிய நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கான ஒரு லட்சத்து 7500 ஏக்கர் மற்றும் உற்பத்தி இலக்கான 1.70 லட்சம் மெட்ரிக் டன் இலக்கை எட்டுவதற்கு, விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் பெறவும் கோ ரிக்கைகளை முழுமையாக நிறை வேற்றி தரவேண்டும். குறுவை மற்றும் குறுகிய கால நெல் ரகங்களான டிகேஎம் 9, ஏஎல்டி16, ஏடிடீ 36, ஏடிடீ 43, கோ 51, 53 உள்ளிட்ட நெல் ரகங்கள் அனைத்தும் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கிட வேண்டும். அவ்வப்போது ஏற்படும் யூரியா தட்டுப்பாட்டை நீக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து, களைக் கொல்லி மருந்து பயன்பாடு குறித்து வேளாண்மைத் துறை ஆய்வு கள் மேற்கொள்ள வேண்டும்.
பூச்சிக் கொல்லி மருந்து கடைகளில் விவ சாயிகளிடம் நடைபெறும் கொள்ளை யை தடுக்க வேண்டும். வேளாண்மை விரிவாக்க மையங்களில் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்ய வேண்டும். விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் 20 மணிநேரம் வழங்கிட வேண்டும். நெல் கொள்முதல் தடையின்றி ஆயிரம் மூட்டை வரை நாளொன்றுக்கு கொள்முதல் செய்திடவும், தேவைப் படும் இடங்களில் கூடுதல் கொள்முதல் நிலையம் திறக்க வும் ஏற்பாடு செய்ய வேண்டும். பருத்தி, மக்காச்சோளம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே அவற்றிற்கு உரிய விலை கிடைக்கவும், விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டத்தை ஈடு செய்ய இழப்பீடும் வழங்க வேண்டும்” இவ்வாறு அம்மனு வில் கூறப்பட்டுள்ளது.