tamilnadu

பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

 தஞ்சாவூர், மார்ச்.15- தஞ்சாவூர் மாவட்டம், கொளக்குடி ஊராட்சி பூலாங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொது விநியோ கத் திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை வட்ட வழங்கல் அலுவலர் டி.சுகுமார் தலை மையில் நடைபெற்றது.  ஒன்றியக்குழு உறுப்பி னர் குழ.செ.அருள்நம்பி, கொளக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் காசியம்மாள் மணி ஆகியோர் முன்னி லை வகித்தனர். கிராம நிர் வாக அலுவலர் ரவிச்சந்திரன், இளநிலை வருவாய் ஆய்வா ளர் தில்லைராஜன், கிராம உதவியாளர் கந்தசாமி, ஊராட்சி செயலாளர் ஏ.பாலச்சந்தர், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயகமூர்த்தி கலந்து கொண்டனர்.  முகாமில் குடும்ப அட்டை யில் திருத்தம் மற்றும் 35 கிலோ அரிசி வழங்க விண் ணப்பம் உள்ளிட்ட 177 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.