தஞ்சாவூர், டிச.23- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள ஊரணி சுகாதாரம் மற்றும் கல்வி அறக் கட்டளை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை செயலாளர் ஏ.ஆனந்தராஜ் தலைமை வகித்தார். பொ ருளாளர் ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஏ.பானுமதி (பெத்தனாட்சிவயல்), இசக்கியம்மாள் (காரங்குடா) ஆகியோர் வரவேற்றனர். சேதுபாவாசத்திரம் வட்டார சுகாதார மேற் பார்வையாளர் கே.பாஸ்கரன், அறக்கட்ட ளை நிர்வாகிகள், காரங்குடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர் திருஞான வேல், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கள் எம்.அமுதா பெத்தனாட்சிவயல்), சீதாதேவி (காரங்குடா), சத்துணவு அமைப்பாளர் உமை யாள் தேவி, நதியா மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர். பெத்தனாட்சிவயல் பள்ளி மாணவர்க ளுக்கு எவர்சில்வர் தட்டு, டம்ளர், டிபன் பாக்ஸ், ரொட்டி, காரங்குடா பள்ளி மாணவர்க ளுக்கு எழுது பொருட்கள், குறிப்பேடுகள் வழங்கப்பட்டனது. மேலும், சுகாதார விழிப்புணர்வு கல்வி மற்றும் நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது.