கும்பகோணம், மே 24- ஊரடங்கால் மூடப்பட்ட கும்ப கோணத்திலுள்ள சில தனியார் பள்ளிகள் ஏப்ரல், மே மாத கட்டணங்களை ஆசிரி யர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக ஏப்ரல் மே மாத கட்டணத்தை கட்ட வற்புறுத்துகின்றனர். அப்படி இல்லையென்றால் தங்களுக்கு சம்பளம் கிடைக்காது என்றும் ஆசிரியர்கள் தெரி விக்கின்றனர். இதனால் ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி மிகவும் கஷ்ட மான சூழ்நிலையில் உள்ள பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு உட்படுத்தப்பட்டுள் ளனர். பள்ளி மூடப்பட்ட காலத்திற்கும் கட்ட ணம் செலுத்த வேண்டுமா என்றும் பெற்றோர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். மேலும் சில தனியார் பள்ளிகள் சில மாண வர்களிடம் பள்ளி துவங்குவதற்கு முன்பே ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூல் செய்தி ருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது குறித்து தமிழக அரசு தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற் றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.