தஞ்சாவூர், ஆக.2- மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில், தஞ்சா வூர் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் கொரோனாவை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட சித்த மருத்துவ அலு வலர் எம்.வனஜா கூறி யுள்ளார். மத்திய தகவல் ஒளி பரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் கள விளம்பரத்துறை அலுவலகம் சார்பில், “அதிக ரித்துவரும் கொரோனா தொற்று: தடுப்பதற்கான வழி முறைகளும் ஆலோச னைகளும்” என்ற தலைப்பி லான காணொலிக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தஞ்சாவூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எம். வனஜா பேசுகையில், “கொ ரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மக்களை தே டிச்சென்று அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுகா தார நிலையங்கள், குறிப்பாக தஞ்சை மாவட்டத்துக்கு உட்பட்ட கும்பகோணம், பாப நாசம், அம்மாபேட்டை, அய்யம்பேட்டை பட்டீஸ்வ ரம், உள்ளிட்ட 50 மையங்க ளில் ஆயுஷ் அமைச்ச கத்திற்கு உட்பட்ட சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா மூலம் கொ ரோனாவுக்கான தடுப்பு மரு ந்தை வழங்கி வருகிறோம்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த மையங்க ளில் கபச்சுரம், நிலவேம்புச் சூரணம் போன்றவற்றை இல வசமாக பெற்றுக் கொள்ள லாம். கபச்சுரக் குடிநீரை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இந்த குடிநீரை குழந்தைகள் முதல் பெரி யவர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம். ஆனால் அவ்வப்போது இந்த குடி நீரை தயாரித்தே அருந்த வேண்டும். மேலும் இஞ்சி, எலுமிச்சை, மிளகு, துளசி, நெல்லிக்காய், மஞ்சள் கலந்து கொதிக்க வைத்த குடிநீரையும் மக்கள் அவ்வ ப்போது பயன்படுத்தலாம். அதோடு வேப்பிலை, மஞ்சள், ஓமவல்லியைக் கலந்து சுட வைத்து ஆவி பிடிக்க வேண்டும்” என்றார். தஞ்சாவூர் மக்கள் தொ டர்பு அலுவலர் கே.ஆனந்த பிரபு வரவேற்றார். மக்கள் தொடர்பு கள விளம்பர உத வியாளர் அருண்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இணை யவழி சான்றிதழ் வழங்க ப்பட்டதோடு இந்த நிகழ்ச்சியை யூடியூபிலும் நேரலை செய்யப்பட்டது.